தமிழக செய்திகள்

என்.எல்.சி. சுரங்க பணிக்கு நிலம் கொடுக்க மறுத்து கிராம மக்கள் உண்ணாவிரதம் நெய்வேலி பகுதியில் நடக்கும் தொடர் போராட்டங்களால் பரபரப்பு

என்.எல்.சி. சுரங்க பணிக்கு நிலம் கொடுக்க மறுத்து கிராம மக்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். நெய்வேலி பகுதியில் நடக்கும் தொடர் போராட்டங்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நெய்வேலி,

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ளது என்.எல்.சி. இந்தியா நிறுவனம். இங்கு திறந்தவெளி நிலக்கரி சுரங்கங்களில் இருந்து வெட்டி எடுக்கப்படும் பழுப்பு நிலக்கரியை கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. நிறுவனம் தனது தேவைக்கு போக எஞ்சிய நிலக்கரியை பல்வேறு தொழிற்சாலைகளுக்கும் விற்பனை செய்து வருகிறது.