தமிழக செய்திகள்

என்.எல்.சி. 3-வது சுரங்கம் அமைக்க எதிர்ப்பு: வீடுகளில் கருப்பு கொடி கட்டிய கிராம மக்கள்

என்.எல்.சி. 3-வது சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வீடுகளில் கிராம மக்கள் கருப்பு கொடி கட்டினர்.

தினத்தந்தி

சேத்தியாத்தோப்பு, 

நெய்வேலி என்.எல்.சி. நிறுவனம் சுரங்க விரிவாக்கம், புதிய சுரங்கம் அமைத்தல் ஆகிய பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் சேத்தியாத்தோப்பு அருகே புவனகிரி ஒன்றியத்துக்குட்பட்ட பெரியநற்குணம், ஆதனூர், வீரமுடையாநத்தம் உள்ளிட்ட கிராமங்களில் 3-வது சுரங்கம் அமைக்க இருப்பதாக என்.எல்.சி. நிறுவனம் ஏற்கனவே அறிவித்து இருந்தது.

இந்த நிலையில் மேற்படி கிராமங்களில் 3-வது சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் நேற்று கருப்பு கொடி கட்டினர். இதுபற்றிய தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு போலீசார் விரைந்து வந்து வீடுகளின் முன்பு கட்டி இருந்த கருப்பு கொடிகளை அகற்றினர். மேலும் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு