தமிழக செய்திகள்

காதலி இறந்த சோகத்தில் வடமாநில தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை - போலீசார் விசாரணை

காதலி இறந்த சோகத்தில் மீஞ்சூர் அருகே வடமாநில தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ரோகித்குமார் (வயது 21). இவர் ஒப்பந்த தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் மீஞ்சூர் அடுத்த நாலூர் ஊராட்சியில் உள்ள கேசவபுரம் கிராமத்தை தனியார் குடியிருப்பு ஒன்றில் சக தொழிலாளிகளுடன் தங்கி வேலைக்கு சென்று வந்தார்.

இந்நிலையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே பீகாரில் காதலி இறந்து விட்டதாக அவருக்கு தகவல் கிடைத்ததையடுத்து, ரோகித்குமார் மன வருத்தத்தில் இருந்து வந்ததாக தெரிகிறது. இதையடுத்து தங்கி இருந்த வீட்டில் உள்ள இரும்பு கம்பியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த மீஞ்சூர் போலீஸ் சம்பவ இடத்திற்கு சென்று தூக்கில் தொங்கி கிடந்த வடமாநில தொழிலாளி ரோகித்குமார் உடலை கைப்பற்றி பொன்னேரி அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மீஞ்சூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு