தமிழக செய்திகள்

அடையாளம் தெரியாத வாகனம் மோதி வடமாநில நபர் பலி

தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் புதூர்பாண்டியாபுரம் பாலத்தின் மீது நடந்து சென்ற வட மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி அருகே மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அடையாளம் தெரியாத வட மாநில நபர் உயிரிழந்தார்.

வாகனம் மோதி வடமாநில நபர் பலி

தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் புதூர்பாண்டியாபுரம் பாலத்தின் மீது நடந்து சென்ற வட மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

போலீசார் விசாரணை

அவர் யார் என்பது அடையாளம் தெரியவில்லை. மேலும் இந்த விபத்து குறித்து புதியம்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இறந்த நபர் மற்றும் மோதிய வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.