தமிழக செய்திகள்

கோவை நொய்யல் ஆற்றில் ரசாயன கழிவுகளால் பொங்கி எழும் நுரை - பொதுமக்கள் புகார்

ஆற்றில் ரசாயன கழிவுகள் கலக்கப்படுவதால் நுரை ஏற்பட்டுள்ளதாக அங்குள்ள மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

தினத்தந்தி

கோவை,

கோவை மாவட்டம் நஞ்சுண்டாபுரம் பகுதியில் நொய்யல் ஆற்றில் நுரை பொங்கி தண்ணீர் ஓடுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். ஆற்றில் ரசாயன கழிவுகள் கலக்கப்படுவதால் இந்த நுரை ஏற்பட்டுள்ளதாக அங்குள்ள மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், ஆற்று நீரை விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆற்றில் குளிக்கும் பொதுமக்களுக்கு அரிப்பு உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு