தமிழக செய்திகள்

தமிழகத்தில் அரசு வேலைக்காக காத்திருப்போரின் எண்ணிக்கை - விவரம் வெளியீடு

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்திருப்பவர்களின் விவரங்களை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் மாவட்டம் மற்றும் மாநில வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்திருப்பவர்களின் விவரங்களை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து அரசு வேலைக்காக 73 லட்சத்து 31 ஆயிரத்து 302 பேர் காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஆண்கள் 34 லட்சத்து 41 ஆயிரத்து 360 பேர், பெண்கள் 38 லட்சத்து 89 ஆயிரத்து 715 பேர் மற்றும் 3-ம் பாலினத்தவர் 227 பேர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு செய்தவர்களில் 24-35 வயது வரை உள்ளவர்கள் 26 லட்சத்து 86 ஆயிரத்து 932 பேர், 36-57 வயது வரை உள்ளவர்கள் 12 லட்சத்து 97 ஆயிரத்து 693 பேர், 58 வயதுக்கு மேல் உள்ளவர்கள் 11 ஆயிரத்து 245 பேர் ஆவர்.

அதே சமயம் மாற்றுத்திறனாளிகள் மொத்தம் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 871 பேர் அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருக்கின்றனர்.

மேலும் பட்டதாரி ஆசிரியர்கள் 3 லட்சத்து 56 ஆயிரத்து 140 பேர் மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 2 லட்சத்து 66 ஆயிரத்து 386 பேர் அரசு வேலைக்காக காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு