தமிழக செய்திகள்

ஓ.பன்னீர் செல்வத்தின் தாயார் மறைவுக்கு திமுக சார்பில் நேரில் அஞ்சலி

ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மறைவுக்கு திமுக சார்பில் நேரில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

தினத்தந்தி

தேனி,

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார்(வயது 95) உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றைய தினம் உயிரிழந்தார்.

அவரது இறுதிச்சடங்கு இன்று நடைபெற்றது. ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மறைவுக்கு அரசியல் கட்சியினர் பலர் இரங்கல் தெரிவித்தனர்.

இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மறைவுக்கு திமுக சார்பில் நேரில் அஞ்சலி செலுத்தப்பட்டு உள்ளது. அமைச்சர் ஐ.பெரியசாமி, மகாராஜன் எம்.எல்.ஏ.. மற்றும் தேனி மாவட்ட செயலாளர் தங்கதமிழ்செல்வன் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்