தமிழக செய்திகள்

ஓ.பன்னீர்செல்வம் சாமி தரிசனம்

பழனி முருகன் கோவிலில், ஓ.பன்னீர்செல்வம் சாமி தரிசனம் செய்தார்.

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று மாலை பழனி முருகன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். முன்னதாக அடிவாரத்தில் இருந்து ரோப்கார் மூலம் மலைக்கோவிலுக்கு சென்ற அவர், சாயரட்சை பூஜையில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் மீண்டும் ரோப்கார் வழியாக அடிவாரம் வந்தார். அப்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நிலைப்பாடு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் அவர், எவ்வித பதிலும் கூறாமல் அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார். ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பழனி முருகன் கோவிலில் ஓ.பன்னீர்செல்வம் சாமி தரிசனம் செய்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்