தமிழக செய்திகள்

அக்டோபர் 6ம் தேதி: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் வெளியீடு

தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை விவரம் வெளியாகி உள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 5,017 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,30,408 ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 5,75,212 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 5,548 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 71 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் மொத்தம் பலி எண்ணிக்கை 9,917 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,306 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 1,75,484 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 78,63,864 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 81,128 கொரோனா மாதிரிகள் பரிசேதனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை 76,34,561 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 79,279 நபர்களுக்கு கொரோனா பரிசேதனை செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 189 மையங்களில் (அரசு - 66, தனியார் - 123) கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. தற்போது 45,881 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 3,80,629 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 3,088 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 2,49,748 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 1,929 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை மொத்தம் 31 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைய தினம் யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை.

தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு, குணமானவர்கள், இறந்தவர்கள் எண்ணிக்கை விவரம் வருமாறு:-

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு