கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

ஒடிசா-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் நேரம் மாற்றம் - தெற்கு ரெயில்வே

பராமரிப்பு பணி நடைபெறுவதால் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தாமதமாக புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஒடிசா மாநிலம், குர்தா ரோடு- பிரம்மாபூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் அந்த வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பிப்ரவரி 1-ந் தேதி தாமதமாக புறப்படும்.

அதன்படி, புவனேஸ்வரில் இருந்து பிப்ரவரி 1-ந் தேதி மதியம் 12.10 மணிக்கு புறப்பட்டு, சென்னை சென்டிரல் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-12830) 3 மணி நேரம் தாமதமாக மாலை 3.10 மணிக்கு புவனேஸ்வரில் இருந்து புறப்படும்.

அதே தேதியில், மேற்கு வங்க மாநிலம் சந்திரகாச்சியில் இருந்து அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு, தாம்பரம் வரும் சிறப்பு ரெயில் (06054) 2 மணி நேரம் தாமதமாக காலை 7 மணிக்கு சந்திரகாச்சியில் இருந்து புறப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு