தமிழக செய்திகள்

நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர்.

நிலக்கோட்டை பூ மார்க்கெட் மற்றும் தினசரி காய்கறி சந்தையில் திண்டுக்கல் தொழிலாளர் இணை ஆணையர் கோவிந்தன் உத்தரவின் பேரில், தொழிலாளர் முத்திரை அளவீடு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர்.

இதில் பழனி தொழிலாளர் துணை ஆய்வாளர் மனோஜ் சியாம் சங்கர் தலைமையில் நிலக்கோட்டை தொழிலாளர் உதவி ஆய்வாளர் செந்தில் ஆண்டவன், முத்திரை ஆய்வாளர் விஜயராகவன், பழனி முத்திரை ஆய்வாளர் ராஜமுருகன், பழனி உதவி ஆய்வாளர் நக்ருதீன் பானு, பழனி சரக உதவியாளர் சுந்தரம் ஆகியோர் கடைகளில் உள்ள தராசுகள், எடைக்கற்களை ஆய்வு செய்தனர்.

இதில் முத்திரையிடப்படாத எடை அளவுகள் மற்றும் தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் தராசுகளுக்கு உரிய காலத்திற்குள் மறு முத்திரை இட்டுக் கொள்ளவேண்டும் என்று வணிகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...