தமிழக செய்திகள்

தடுப்பணையை சீரமைப்பதற்காக ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் ஆய்வு

தடுப்பணையை சீரமைப்பதற்காக ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

தினத்தந்தி

வந்தவாசி

தடுப்பணையை சீரமைப்பதற்காக ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

வந்தவாசியை அடுத்த மேல்பாதி கிராமத்தில் தொடங்கும் சுகநதியானது வல்லம், ஆனைபோகி, எறும்பூர், ஆராசூர், மாம்பட்டு, வந்தவாசி, பிருதூர், வழூர், கீழ்பாக்கம், உளுந்தை வழியாக செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஏரியில் சென்று கலக்கிறது.

இந்த நதியானது வந்தவாசி நகரை ஒட்டியவாறு சென்று செம்பூர் கிராமத்தில் இருந்து மருதாடு ஏரி, பிருதூர் ஆற்றுப்பகுதிக்கு செல்கிறது. வந்தவாசி நகரில் உள்ள ஐந்து கண் பாலம் அருகே சென்னாவரம், பிருதூர், மங்கநல்லூர் பெரிய ஏரி, சித்தேரிகளுக்கு செல்லும் வகையில் சிறிய தடுப்பணை ஏற்படுத் தப்பட்டுள்ளது. இந்த தடுப்பணை தற்போது சிதிலடைந்துள்ளதால் எள்ளுபாறை பகுதியில் ரூ.73.30 கோடியில் தடுப்பணை ஏற்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனையொட்டி சுகநதி கரையில் உள்ளவர்களை அப்புறப்படுத்த எச்சரிக்கை நோட்டீசு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தொடர்ந்து இரண்டாவது நாளாக பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் தினேஷ்குமார் தலைமையில் வருவாய் ஆய்வாளர் வெங்கடேசன், கிராம அலுவலர் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலையில் வான்வெளி இணைய சேவை மூலமாக இடத்தை அளவீடு செய்யும் பணியை எள்ளுபாறை பகுதியில் அளவீடு செய்தனர்.

இதில் கண்டறியப்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றிய பிறகு தடுப்பணை கட்டும்பணி நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து