தமிழக செய்திகள்

மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலி

மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலியானார்.

தினத்தந்தி

மாயனூர் அருகே உள்ள மேட்டு திருக்காம்புலியூரை சேர்ந்தவர் பரத்குமார் (வயது 25). இவர் தனது மோட்டார் சைக்கிளில் சொந்த வேலை நிமித்தமாக கரூருக்கு சென்று விட்டு, ஊருக்கு கரூர்-திருச்சி தேசியநெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்பாது இவருக்கு பின்னால் மணவாசி முடக்கு சாலையை சேர்ந்த சுகுமார் (22) மற்றொரு மோட்டார் சைக்கிளில், லலிதா (60) என்பவரை அழைத்துக்கொண்டு வந்தார். அப்போது எதிபாராத விதமாக பரத்குமார் மோட்டார் சைக்கிள் மீது, சுகுமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட லலிதா படுகாயம் அடைந்தார். இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் படுகாயம் அடைந்த லலிதாவை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லலிதா பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து மாயனூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து