தமிழக செய்திகள்

கும்மிடிப்பூண்டி அருகே மூதாட்டியின் தங்க சங்கிலி பறிப்பு

கும்மிடிப்பூண்டி அருகே மூதாட்டியின் தங்க சங்கிலி பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

தினத்தந்தி

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டையை சேர்ந்த ரவணைய்யா நாயுடு என்பவரின் மனைவி புள்ளம்மாள் (வயது 70). இவர், நேற்று வீட்டு வாசலில் கோலம் போட்டு விட்டு வீட்டிற்குள் செல்ல முயன்றார்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவன், அவரது கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றா.

இதுகுறித்து மூதாட்டி புள்ளம்மாள் கும்மிடிப்பூண்டி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் தலைமையில் கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்க சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபரை வவைவீசி தேடி வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து