தமிழக செய்திகள்

பெண்ணை மிரட்டிய முதியவர் கைது

சேரன்மாதேவி அருகே பெண்ணை மிரட்டிய முதியவரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

சேரன்மாதேவி:

சேரன்மாதேவியை அடுத்த கங்கணாங்குளம் அருகே உள்ள பிள்ளைகுளம், அந்தோணிநகர் பகுதியை சேர்ந்த தங்கவேல் (வயது 65). இவர் நேற்று முன்தினம் தனது பக்கத்து வீட்டில் குடியிருக்கும் பிரதீபா (26) என்பவரிடம் அவதூறாக பேசி தகராறில் ஈடுபட்டுள்ளார். அதனை பிரதீபாவும் அவரது கணவர் துரைசிங்கும் தட்டி கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த தங்கவேல், பிரதீபா வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை ஆயுதத்தால் தாக்கி சேதப்படுத்தி, மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து பிரதீபா சேரன்மாதேவி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தங்கவேலை கைது செய்தனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு