தமிழக செய்திகள்

மொபட் மோதி முதியவர் பலி

ஆயக்குடியில் மொபட் மோதி முதியவர் பலியானார்.

தினத்தந்தி

பழனியை அடுத்த பழைய ஆயக்குடியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 85). இவர் நேற்று முன்தினம் சட்டப்பாறை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த முத்துச்சாமி என்பவர் ஓட்டி வந்த மொபட் எதிர்பாராதவிதமாக ராமசாமி மீது மோதியது. இதில் காயமடைந்த அவர் பழனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்ற நிலையில் நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆயக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்