தமிழக செய்திகள்

விவசாய கிணற்றில் முதியவர் பிணம்

கீழ்பென்னாத்தூர் அருகே விவசாய கிணற்றில் முதியவர் பிணமாக கிடந்தார்.

கீழ்பென்னாத்தூர்

கீழ்பென்னாத்தூரையடுத்த செவரப்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார், விவசாயி. இவரது விவசாய கிணற்றில் ஆண் பிணம் தலைகுப்புற கிடந்தது.

இது குறித்து கீழ்பென்னாத்தூர் போலீசில் கீக்களூர் கிராம நிர்வாக அலுவலர் மதியழகன் புகார் செய்தார்.

சம்பவ இடத்திற்கு கீழ்பென்னாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி, சப்-இன்ஸ்பெக்டர் சக்கரவர்த்தி மற்றும் போலீசார் தீயணைப்பு படையினருடன் விரைந்து சென்று மீட்டனர்.

பிணமாக கிடந்தவருக்கு 65 வயது இருக்கும். அடையாளங்களை பதிவு செய்தபின் பிரேத பரிசோதனைக்காக உடலை திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், கிணற்றில் இறந்து கிடந்த முதியவர் கடந்த 3 நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், செவரப்பூண்டி பகுதியில் சுற்றித்திரிந்தவர் என்பது தெரிய வந்தது.

அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு