தமிழக செய்திகள்

மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி

மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பரிதாபமாக இறந்தார்.

தினத்தந்தி

மதுரை மாவட்டம் அப்பன்திருப்பதி பகுதியை சேர்ந்தவர் ராஜூ (வயது 73). இவர், நத்தம் கோவில்பட்டி பகுதியில் உள்ள விறகு கடையில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு நத்தம் புளிக்கடை பஸ் நிறுத்தம் பகுதியில் சாலையை கடக்க முயன்றார். அப்போது நத்தம் கோவில்பட்டியை சேர்ந்த தியாகு என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் ராஜூ மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர், மேல்சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜூ பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்