தமிழக செய்திகள்

வீட்டில் பிணமாக கிடந்த மூதாட்டி

நெல்லையில் வீட்டில் மூதாட்டி பிணமாக கிடந்தார்.

தினத்தந்தி

நெல்லை டவுன் கிழக்கு ரதவீதியை சேர்ந்தவர் சுந்தரம். இவருடைய மனைவி பிரேமா (வயது 69). இவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார். கடந்த 4 நாட்களாக பிரேமா வீட்டில் இருந்து வெளியே வரவில்லை என்று கூறப்படுகிறது. நேற்று முன்தினம் அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வந்தது. இதுகுறித்து அந்த பகுதி மக்கள் நெல்லை டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தபோது அங்கு பிரேமா இறந்த நிலையில் கிடந்தார். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்