தமிழக செய்திகள்

லாரி மோதி மூதாட்டி பலி

கந்தம்பாளையத்தில் லாரி மோதி மூதாட்டி இறந்தார்.

கந்தம்பாளையம்

கந்தம்பாளையம் அருகே உள்ள மணியனூரில் விவசாயக்காட்டில் கரூர் பாக நத்தம் செல்வ நகரை சேர்ந்த ராசு என்பவரின் மனைவி சுசீலா (வயது 63). இவரது கணவர் இறந்துவிட்டார். இவர் கூலி வேலை செய்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு உலகபாளையம் பஸ் நிறுத்தம் அருகே தண்ணீர் பிடித்து எடுத்துக்கொண்டு வந்தார். அப்போது எதிரே வந்த லாரி, அவர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த மூதாட்டியை மீட்டு அந்த வழியாக சென்றவர்கள் வேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சுசீலா வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினார். இதுகுறித்து நல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொத்தனர். இதன்பேரில் நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு