தமிழக செய்திகள்

மதுரை ரெயில்வே கோட்ட புதிய மேலாளராக ஓம்பிரகாஷ் மீனா பதவியேற்பு

மதுரை ரெயில்வே கோட்ட புதிய மேலாளர் ஓம்பிரகாஷ் மீனா, முன்னதாக கிழக்கு ரெயில்வே கட்டுமான பிரிவில் சாலை பாதுகாப்பு திட்ட தலைமை பொறியாளராக பணியாற்றி வந்தார்.

தினத்தந்தி

மதுரை ரெயில்வே கோட்ட மேலாளராக இதுவரை இருந்த சரத் ஸ்ரீவத்சவாவின் பதவிக் காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து புதிய மேலாளராக ஓம்பிரகாஷ் மீனா தற்போது பதவி பொறுப்பினை ஏற்றார்.

1996ம் ஆண்டு இந்திய ரெயில்வே பொறியாளர் சேவை பிரிவில் பணியில் சேர்ந்த இவர் இரண்டு ஆண்டு பயிற்சிக்கு பிறகு பணியில் சேர்ந்தார். ராஜஸ்தான், ஜோத்பூர் எம்பிஎம் பொறியியல் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்ற இவர், ஆக்ரா, ஜெய்ப்பூர் மற்றும் பிகானேர் கோட்டங்களில் கோட்ட பொறியாளராகவும், கூடுதலாக ஆக்ராவில் முதுநிலை (பொறுப்பு) கோட்ட பொறியாளராகவும் பணியாற்றியுள்ளார்.

வடமேற்கு ரெயில்வேயில் நிலைய மேம்பாட்டு முதன்மைப் பொறியாளராகவும் பணியாற்றியுள்ளார். முன்னதாக கிழக்கு ரெயில்வே கட்டுமான பிரிவில் சாலை பாதுகாப்பு திட்ட தலைமை பொறியாளராக பணியாற்றி வந்த இவர் தற்போது பணிமாற்றம் செய்யப்பட்டு நேற்று முன்தினம் முதல் தென்னக ரெயில்வேயின் மதுரை மண்டல புதிய மேலாளராக ஓம்பிரகாஷ் மீனா பதவியேற்றார்.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை