தமிழக செய்திகள்

சுதந்திர தினத்தையொட்டி தமிழகத்தில் 449 கோவில்களில் சிறப்பு வழிபாடு, பொது விருந்து

சுதந்திர தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் 449 கோவில்களில் சிறப்பு வழிபாடுடன் பொது விருந்து நிகழ்ச்சி நடக்கிறது.

தினத்தந்தி

சென்னை,

சுதந்திர தினத்தையொட்டி வழிபாடு, இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் சிறப்பு திட்டத்தின்படி தமிழகம் முழுவதும் உள்ள நிதி வசதி மிக்க கோவில்களில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் இந்திய சுதந்திர தினத்தையொட்டி சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் வரும் 15-ந்தேதி (புதன்கிழமை) அன்று கோவில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்ச்சி நடக்கிறது.

நடப்பாண்டு 449 கோவில்களில் அனைத்து சமுதாய மக்களும் பங்கு பெறும் வகையில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடத்தப்பட உள்ளது. இவ்விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு, கோவில்களில் காணிக்கையாகப் பெறப்பட்டு உபரியாக உள்ள பருத்தி வேட்டி மற்றும் சேலைகள் வழங்கப்பட உள்ளன. மாவட்டங்களில் உள்ள கோவில்களில் மாவட்ட கலெக்டர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொள்ள உள்ளனர்.

சென்னை பெருநகர பகுதிகளில் நடைபெறும் இச்சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்ச்சிகளில் சபாநாயகர், முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொள்கின்றனர். குறிப்பாக திருவொற்றியூர் தியாகராஜசுவாமி கோவிலில் சட்டசபை சபாநாயகர் ப.தனபால், கே.கே.நகர். பி.டி.ராஜன் பூங்கா சாலையில் உள்ள சக்தி விநாயகர் கோவிலில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொள்கிறார்கள். இதேபோன்று சென்னையில் உள்ள பிற கோவில்களில் அமைச்சர்கள் கலந்துகொள்கின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்