தமிழக செய்திகள்

வரலட்சுமி நோன்பையொட்டி வளையல் அலங்காரத்தில் பத்மாவதி அம்மன்

வரலட்சுமி நோன்பையொட்டி பத்மாவதி அம்மன் வளையல் அலங்காரத்தில் அருள்பாலித்தார்

தினத்தந்தி

போடி நகர் காமராஜர் சாலையில் சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் அருள்மிகு பத்மாவதி அம்மன் தனி சன்னதியில் வீற்றிருக்கிறார். இந்நிலையில் இன்று வரலட்சுமி நோன்பையொட்டி பத்மாவதி அம்மனுக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட 16 பொருட்களால் அபிஷேகம் நடந்தது. இதையடுத்து அம்மனுக்கு பட்டாடை உடுத்தி, 50 ஆயிரம் வளையல்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். 

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்