தமிழக செய்திகள்

கம்பத்தில் மோட்டார் சைக்கிள்கள் மோதல்; ஆம்புலன்ஸ் டிரைவர் பலி

கம்பத்தில் மோட்டார்சைக்கிள்கள் மோதிய விபத்தில் ஆம்புலன்ஸ் டிடிரவர் பரிதாபமாக இறந்தார்.

தினத்தந்தி

உத்தமபாளையம் அருகே உள்ள ஆனைமலையன்பட்டி பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 40). 108 ஆம்புலன்ஸ் டிரைவர். நேற்று இவர், கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் ஆம்புலன்சை நிறுத்தி விட்டு எதிரே உள்ள டீக்கடைக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து மோட்டார்சைக்கிளில் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார்சைக்கிள் எதிர்பாராதவிதமாக இவரது மோட்டார்சைக்கிள் மீது மாதியது. இதில் தூக்கி வீசப்பட்ட வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மற்றொரு மோட்டார்சைக்கிளை ஓட்டி வந்த கூடலூர் பேச்சியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த விவேக் (23), பின்னால் அமர்ந்திருந்த ராஜபாண்டி ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

தகவல் அறிந்த கம்பம் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் வெங்கடேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும் படுகாயமடைந்த 2 பேரையும் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்