தமிழக செய்திகள்

"ஒரே நாடு, ஒரே தேர்தல் - நாட்டின் வளர்ச்சிக்கு அவசியம்"- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

நாட்டின் வளர்ச்சிக்கு ஒரே நாடு, ஒரே தேர்தல் அவசியம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

தினத்தந்தி

திருவள்ளூர்,

திருவள்ளூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் கூறியதாவது;

"நாட்டின் வளர்ச்சிக்கு ஒரே நாடு, ஒரே தேர்தல் அவசியம். ஒரே நாடு, ஒரே தேர்தலால், மக்களின் வரிப்பணம் வீணாவது தவிர்க்கப்படும். காலத்தின் கட்டாயத்தின்படி, இந்தியா முழுவதும்  சட்டமன்றத்திற்கும், நாடாளுமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது நல்ல விஷயம்.

முதல்-அமைச்சர் கூறியது போல் அதிமுக ஒன்றும் விபரீதம் தெரியாமல் ஆதரிக்கவில்லை. ஒரே நாடு, ஒரே தேர்தலால் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிக்கும். ஒரே நாடு, ஒரே தேர்தலை நாங்கள் தைரியமாக எதிர்கொள்வோம் என கூற திமுக அஞ்சுகிறது." இவ்வாறு அவர் கூறினார்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்