தமிழக செய்திகள்

கனகம்மாசத்திரம் அருகே பிறந்து ஒரு நாளே ஆன பெண் சிசு பிணமாக மீட்பு - போலீசார் விசாரணை

கனகம்மாசத்திரம் அருகே பிறந்து ஒரு நாளே ஆன பெண் சிசு பிணத்தை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினத்தந்தி

திருவள்ளூர் மாவட்டம் கனகம்மாசத்திரம் அடுத்த முத்துக்கொண்டாபுரம் கிராமத்தின் அருகே கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தின் கீழ் பிறந்து ஒரு நாள் மட்டுமே ஆன பெண் சிசு இறந்த நிலையில் துணி பையில் பிணமாக இருந்தது. இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கனகம்மாசத்திரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து விரைந்த போலீசார் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கனகம்மாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து