தமிழக செய்திகள்

திருவண்ணாமலையில் முதன்முறையாக கொரோனா பாதிப்புக்கு ஒருவர் பலி

திருவண்ணாமலையில் முதன்முறையாக கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஒருவர் பலியாகி உள்ளார்.

தினத்தந்தி

திருவண்ணாமலை,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை இதற்கு பலியானோர் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 2 நாட்களில் 1,035 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல் முறையாக நேற்று 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் தற்போது பச்சை மண்டலமே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 508 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 279 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். சென்னையில் நேற்று 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

திருவண்ணாமலையில் முதன்முறையாக கொரோனா பாதிப்புக்கு ஒருவர் பலியாகி உள்ளார். திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த ஆரணியை சேர்ந்த 55 வயது பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். திருவண்ணாமலையில் கொரோனாவுக்கு இதுவரை 25 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், ஒருவர் உயிரிழந்து உள்ளார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை