தமிழக செய்திகள்

சேலம்: காவல் நிலைய வளாகத்தில் மர்ம பொருள் வெடித்ததில் ஒருவர் பலி

காவல் நிலைய வளாகத்தில் இருந்த குப்பைகளை எரித்தபோது இந்த விபத்து நடந்துள்ளது.

தினத்தந்தி

சேலம்,

சேலம் மாவட்டம் சங்ககிரி ஜி-1 காவல்நிலைய வளாகத்தில் இருந்த குப்பைகளை எரிக்கும் போது மர்ம பொருள் வெடித்து சிதறியது. மர்ம பொருள் ஒன்று வெடித்ததில் தகரம் சிதறி மேலே பட்டதால் நியாமத்துல்லா (வயது 47) என்பவர் உயிரிழந்தார். பரத் என்பவர் படுகாயம் அடைந்துள்ளார். விபத்து நடந்த இடத்தில் சேலம் மாவட்ட எஸ்.பி.அருண் கபிலன் நேரில் விசாரணை நடத்தி வருகின்றார். காவல் நிலையத்தில் பழைய பொருட்களை எரித்தபோது விபத்து நடந்துள்ளது. காயமடைந்த பரத் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்