தமிழக செய்திகள்

காஞ்சீபுரத்தில் குழந்தைகள் காப்பகத்திலிருந்து தப்பியோடிய மேலும் ஒருவர் மீட்பு

காஞ்சீபுரத்தில் குழந்தைகள் காப்பகத்திலிருந்து தப்பியோடிய திருச்சியை சேர்ந்த சிறுமியை நேற்று முன்தினம் போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

காஞ்சீபுரம் பிள்ளையார்பாளையம் அருகே தாத்திமேடு சாலபோகம் பகுதியில் அன்னை சத்யா அரசு குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆதரவற்ற குழந்தைகள், கல்வி நிலையை தொடர இயலாத குழந்தைகள் தங்கியிருந்து கல்வி கற்று வருகின்றனர். இந்த காப்பகத்தில் குழந்தைகள், சிறுமிகள் என 29 பேர் உள்ளனர்.

இந்த நிலையில் இரவு பணியில் இருந்த பாதுகாவலரனின் அறையை தாழிட்டு விட்டு 6 சிறுமிகள் காப்பகத்தில் இருந்து தப்பி ஓடினர். இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 6 சிறுமிகளில் 5 பேரை பத்திரமாக மீட்டனர். இந்த நிலையில் மீதமுள்ள திருச்சியை சேர்ந்த சிறுமியை நேற்று முன்தினம் போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்