தமிழக செய்திகள்

கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம் தொடர்பாக மேலும் ஒருவர் கைது

கல்வராயன்மலையில் போலீசார் முகாமிட்டு சாராய வியாபாரிகளை கைது செய்து வருகிறாகள்.

தினத்தந்தி

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி கருணாபுரம், மாதவச்சேரி, சேஷசமுத்திரம் ஆகிய பகுதிகளில் விஷ சாராயம் குடித்து 65 பேர் பலியானார்கள். மெத்தனால் கலந்த சாராயத்தை குடித்ததால் அவர்கள் இறந்ததாக கூறப்பட்டது. பின்னர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணையில் தண்ணீரில் கலந்த மெத்தனால் என்பது தெரியவந்தது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர சாராய வேட்டை நடத்தி வியாபாரிகளை கைது செய்து வருகின்றனர். அதேபோல் கள்ளச்சாராயம் காய்ச்சப்படும் கல்வராயன்மலையில் போலீசார் முகாமிட்டு சாராய வியாபாரிகளை கைது செய்து வருகிறாகள்.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம் தொடர்பாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த வேலு என்பவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்டுள்ள வேலு, மாதேஷிடம் விஷ சாராயம் வாங்கி சேஷசமுத்திரம் பகுதியில் விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. விஷ சாராய வழக்கில் இதுவரை 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து