சென்னை,
கடந்த மே மாதம் 7 ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பெறுப்பேற்றுக்கெண்டார். பதவி ஏற்று ஓராண்டு நிறைவடைவதையெட்டி, முதலமைச்சர் ஸ்டாலின், நாளை கலைஞர் நினைவிடம் செல்கிறார். பின்னர் சட்டபேரவைக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளதால், பேரவை வளாகம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
மானியக்கேரிக்கை விவாதம் நடைபெறும் நிலையில் நாளை கேள்வி நேரம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பேரவை தெடங்கியதும் நேரமில்லா நேரமாக எடுத்துகெள்ளப்படும்பேது, அரசின் செயல்பாடுகள் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் பேசுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
பேரவை நிகழ்வுகள் முடிந்த பின் அறிவாலயம் செல்லும் முதலமைச்சர், திமுக தெண்டர்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் வாழ்த்துக்களை பெறவுள்ளார். திமுக ஆட்சி பெறுப்பேற்று ஒராண்டு நிறைவடைதையெட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாளை புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.