தமிழக செய்திகள்

குரூப் 'B' மற்றும் குரூப் 'C' பிரிவு ஊழியர்கள் 50% பேர் மட்டுமே பணிக்கு வர வேண்டும்- புதுச்சேரி அரசு

அரசு செயலர்கள், அரசுத்துறையின் தலைவர்கள் முழுமையாக பணிக்கு வர வேண்டும் என புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.

தினத்தந்தி

புதுச்சேரி,

புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் கொரோனா 3-வது அலை பரவியுள்ளது. இதனால், தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், குரூப் 'B' மற்றும் குரூப் 'C' பிரிவு ஊழியர்கள் 50% பேர் மட்டுமே பணிக்கு வர வேண்டும் என்று புதுவை அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், அரசு செயலர்கள், அரசுத்துறையின் தலைவர்கள் முழுமையாக பணிக்கு வர வேண்டும் எனவும் கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் தேவைப்பட்டால் பணிக்கு வரலாம் எனவும் புதுச்சேரி அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு