தமிழக செய்திகள்

ஊரடங்கால் வைகாசி விசாக திருவிழா ரத்து: திருச்செந்தூர் கோவில் வளாகம், கடற்கரை வெறிச்சோடியது

ஊரடங்கு காரணமாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா நேற்று ரத்துசெய்யப்பட்டது. இதனால் கோவில் வளாகம் மற்றும் கடற்கரை பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

தினத்தந்தி

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும். இதில் முருகப்பெருமான் பிறந்த தினமான வைகாசி விசாக திருவிழா மிகவும் சிறப்புவாய்ந்தது. அன்றைய தினம் முருகப்பெருமானை வழிபட்டால் ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். அதனால் அன்றைய தினத்தில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சுவாமியை வழிபடுவார்கள்.

கோவில் வளாகம் வெறிச்சோடியது

ஆனால், இந்த ஆண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளதால் கோவிலில் வைகாசி விசாக திருவிழா ரத்து செய்யப்பட்டது. கோவில் வளாகத்தில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இதனால் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கூடும் கோவில் வளாகமும், கடற்கரையும் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

இருப்பினும் வைகாசி விசாக தினத்தையொட்டி நேற்று கோவிலில் வழக்கம்போல் ஆகம விதிப்படி சுவாமிக்கு பூஜைகள் நடந்தன. கொரோனா பரவல் காரணமாக, கடந்த ஆண்டும் வைகாசி விசாக தினத்தன்று பக்தர்கள் யாரும் கோவில் வளாகத்தில் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பழனியில்

பழனியில் முருகன் கோவிலில் 2-வது ஆண்டாக வைகாசி விசாக திருவிழா ரத்து செய்யப்பட்டது. இதனால் பக்தர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்