தமிழக செய்திகள்

5 நாட்களுக்கு பிறகு ஊட்டி மலை ரெயில் சேவை இன்று மீண்டும் தொடங்கியது

5 நாட்களுக்கு பிறகு ஊட்டி மலை ரெயில் சேவை இன்று மீண்டும் தொடங்கியுள்ளது.

தினத்தந்தி

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் குன்னூரில் பெய்த கனமழை காரணமாக, கடந்த 18-ந் தேதி இரவு மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரெயில் பாதையில் குன்னூரில் இருந்து ரன்னிமேடு வரை 16 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது.

மேலும் தண்டவாளத்தில் மரங்கள், பாறைகள் விழுந்தன. இதனால் தண்டவாளங்கள் சேதமடைந்தது. இதனால் கடந்த 5 நாட்களாக மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே மலை ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து சீரமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றது. பணிகளை விரைந்து முடித்து, மலை ரெயில் இயக்குவதற்கான நடவடிக்கைகளை ரெயில்வே துறையினர் மேற்கொண்டனர்.

அதன்படி, கனமழையால் 5 நாட்களாக ரத்து செய்யப்பட்டிருந்த ஊட்டி மலை ரெயில் சேவை இன்று மீண்டும் தொடங்கியுள்ளது. மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரெயில் புறப்பட்டது. இயற்கையின் அழகினை ரசித்தபடி சுற்றுலா பயணிகள் ரெயிலில் பயணித்தனர். குறைந்த வேகத்தில் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. 5 நாட்களுக்கு பிறகு மலை ரெயில் சேவை தொடங்கியதால் சுற்றுலா பயணிகள், உள்ளூர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்