தமிழக செய்திகள்

உதகை தனியார் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். கூட்டத்திற்காக ஒரு வாரம் விடுமுறை - மாவட்ட கல்வி அலுவலர் நோட்டீஸ்

விடுமுறை அறிவித்தது குறித்து உரிய விளக்கமளிக்க பள்ளி நிர்வாகத்திற்கு மாவட்ட கல்வி அலுவலர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

தினத்தந்தி

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் உதகையில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தேசிய தலைவர் மோகன் பகவத் தலைமையில் தேசிய அளவிலான ஆர்.எஸ்.எஸ். உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த திங்கள்கிழமை தொடங்கிய இந்த கூட்டம் நாளை வரை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இதை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ். கூட்டம் நடைபெறும் தனியார் பள்ளிக்கு ஒரு வார காலம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் முறையான அனுமதி இல்லாமல் தனியார் பள்ளி விடுமுறை அறிவித்ததாக குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து, இது குறித்து உரிய விளக்கமளிக்க சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்திற்கு மாவட்ட கல்வி அலுவலர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இது குறித்து தகுந்த விளக்கமளிக்காவிட்டால் பள்ளி நிர்வாகத்தின் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்