தமிழக செய்திகள்

ஊத்துக்கோட்டை அருகே மருத்துவ கழிவு சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு

ஊத்துக்கோட்டை அருகே மருத்துவ கழிவு சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

ஊத்துக்கோட்டை அருகே உள்ள நயப்பாக்கம் கிராமத்தில் தனியார் நிறுவனம் பொது மருத்துவ கழிவு சுத்திகரிப்பு மற்றும் வெளியேற்றும் நிலையம் அமைக்க திட்டமிட்டுள்ளது. இந்த மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு மற்றும் வெளியேற்று நிலையம் அமைப்பது தொடர்பாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நயப்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன் தலைமை தாங்கினார். 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில் தனியார் நிறுவனர் கூறும் போது நயப்பாக்கம் கிராமத்தில் ஒரு ஏக்கர் பரப்பளவில் பொது மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு மற்றும் வெளியேற்ற நிலையில் ரூ.2.20 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளது என்று கூறினார். இது தொடர்ந்து பொதுமக்கள் நயப்பாக்கத்தில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு மற்றும் வெளியேற்று நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பேசும் போது பொது மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டால் கிருஷ்ணா கால்வாய் குடிநீர், பாதிக்கப்படும் என தெரிவித்தனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்