தேனி,
போடியில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்துக் கொண்டு இருந்தபோது அவருக்கு அருகில் ஜெயலலிதா படத்துக்கு மல்லிகை பூ மற்றும் ரோஜா பூ போட்டு வைக்கப்பட்டு இருந்தது.
படத்திற்கு கீழே இருந்த ரோஜா பூவை ஓ.பி.எஸ். ஆதரவாளரும் முன்னாள் மாவட்ட செயலாளருமான சையது கான் எடுத்து வாயில் போட்டு சாப்பிட்டபடி அசைபோட்டுக்கொண்டு இருந்தார்.
ஓ.பன்னீர்செல்வம் உருக்கமாக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை பற்றி பேசிக் கொண்டு இருந்தபோது அதை பொருட்படுத்தாமல் இவர் ரோஜாபூவை ஸ்நாக்ஸ் சாப்பிடுவதைப்போல ஒவ்வொன்றாக எடுத்து சுவைத்துக் கொண்டு இருந்தது ஆதரவாளர்கள் மற்றும் மற்ற நிர்வாகிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.