கோப்புப் படம் 
தமிழக செய்திகள்

குரங்கு அம்மை பாதிப்புகள் பரவி உள்ள நாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்களை கண்காணிக்க உத்தரவு

குரங்கு அம்மை பாதிப்புகள் பரவி உள்ள நாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்களை கண்காணிக்க பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

இந்தியாவில் குரங்கு அம்மை தொற்று கண்டறியப்படவில்லை என்றாலும் பிரிட்டன், அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, கனடா நாடுகளில் பாதிப்பு உள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குரங்கு அம்மை பாதிப்புகள் பரவி உள்ள நாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்களை கண்காணிக்க பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை, கோவை , திருச்சி, சேலம், மதுரை, தூத்துக்குடி விமான நிலையங்களுக்கு தமிழக பொது சுகாதாரத்துறை கடிதம் எழுதியுள்ளது. அதில், விமான நிலையங்களில் சர்வதேச பயணிகளுக்கு காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு உள்ளிட்டவற்றை இருந்தால் பரிசோதனை செய்ய அறிவுறுத்தல் குரங்கு அம்மை தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு விமான நிலையங்களுக்கு தமிழக பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. 

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்