தமிழக செய்திகள்

கோவில் நிதியில் பிற பணிகள்: அனுமதி ரத்து - இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை

கோவில் நிதியில் பக்தர்கள் பயன்பெறும் வகையில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

சென்னை,

இந்து சமய அறநிலையத்துறையினால் தொடங்கப்படாத நிலையில் இருந்த திருமண மண்டபங்கள் மற்றும் வணிகவளாகங்கள் கட்ட வெளியிடப்பட்ட அறிவிப்புகள் கோர்ட்டு தடையாணை காரணமாகவும், கோவில்களின் நிதிச்சுமையினை கருத்திற்கொண்டும் ரூ.245.85 கோடி மதிப்பீட்டிலான 46 பணிகளுக்கான நிர்வாக அனுமதிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

புதிய திட்டங்கள்

இந்த நிதியினை கொண்டு கோவில்கள் மற்றும் பக்தர்கள் பயன்பெறும் வகையில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது