தமிழக செய்திகள்

கொரோனா சிகிச்சைக்கான ஆக்சிஜன் கையிருப்பு: சுகாதாரத்துறை உத்தரவு

கொரோனா சிகிச்சைக்கு தேவையான மருத்துவ ஆக்சிஜனை கையிருப்பில் வைத்திருக்க சுகாதார துறை உத்தரவிட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

கொரோனா 2வது அலையின்போது ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்த நிலையில், கொரோனா 3வது அலை ஏற்பட கூடும் என நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர். அதற்கேற்றாற்போன்று, சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கான வழிகாட்டுதல் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகிறது. இதுபற்றி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து மருத்துவமனைகளும் தற்போதுள்ள கைவசம் உள்ள ஆக்சிஜன் சிகிச்சை மற்றும் சேவைகளை உடனே மதிப்பிட வேண்டும்.

உள்கட்டமைப்பை ஆராய்ந்து, திரவ மருத்துவ ஆக்சிஜன் நிரப்பும் வசதி, வினியோகம் தங்கு தடையின்றி கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும். கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் (உள்நோயாளிகள் பிரிவில்) 48 மணி நேரத்துக்கு தேவையான மருத்துவ ஆக்சிஜனை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும். ஆக்சிஜன் சிலிண்டர், அதனை மீண்டும் நிரப்புவதற்கான அமைப்பு குறித்து ஆராய வேண்டும். வென்டிலேட்டர் வசதி ஏற்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை