தமிழக செய்திகள்

தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்.. எதிர்பாராத மழையால் விவசாயிகள் வேதனை...

மழை நீடித்தால் நெல்மணிகள் முளைக்கக்கூடும் என்பதால், விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

தினத்தந்தி

திருவாரூர்,

வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக டெல்டா, தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.

குறிப்பாக ராமநாதபுரம், வேதாரண்யம், திருச்சி, மயிலாடுதுறை, சிவகங்கை, தஞ்சாவூர், கும்பகோணம், மானாமதுரை, நாகை, புதுக்கோட்டை, கொடைக்கானல், நத்தம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது.

திருவாரூரில் பெய்த மழை காரணமாக சம்பா மற்றும் தாளடி அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மழை நீடித்தால் நெல்மணிகள் முளைக்கக்கூடும் என்பதால், விவசாயிகள் கவலையில் உள்ளனர். 

நாகை மாவட்டத்தில் மழை காரணமாக அறுவடைக்கு தாயாராக இருந்த 40 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் வயலில் சாய்ந்ததால், விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். இதனால் ஏக்கருக்கு 25 ஆயிரம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். 

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை