தமிழக செய்திகள்

மோட்டார் சைக்கிள் மோதி பெயிண்டர் பலி

இலுப்பூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி பெயிண்டர் பலியானார்.

தினத்தந்தி

இலுப்பூர் புதுதெருவை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (வயது 44). பெயிண்டரான இவர், நவம்பட்டி அருகே உள்ள தனியார் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக புங்கினிப்பட்டியை சேர்ந்த சண்முகம் (63) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக ஜெயபிரகாஷ் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த ஜெயபிரகாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சண்முகம் காயமடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த இலுப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சண்முகத்தை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடைய போலீசார் ஜெயபிரகாஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்