தமிழக செய்திகள்

ஊராட்சி செயலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

தினத்தந்தி

தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில தலைவர் ஜான்போஸ்கோ தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பாண்டியராஜன், பொருளாளர் கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், கொடைக்கானல் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி), செயலாளர்களை தரக்குறைவாக பேசுவதாகவும், ஊழியர்களை இடமாற்றம் செய்வேன் என்று மிரட்டுவதாகவும், இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் புகார் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், அவரை இடமாற்றம் செய்ய வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் கிளை தலைவர் துரைப்பாண்டி, செயலாளர் கோபிராஜ், பொருளாளர் கண்ணன், முன்னாள் தலைவர் செந்தில்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் துளசிதாசன் உள்பட பலர் கலந்துகொண்டனர். மேலும் வட்டார வளர்ச்சி அலுவலரை இடமாற்றம் செய்யாவிட்டால், தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்துவோம் என்று சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா