தமிழக செய்திகள்

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் முற்றுகை

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் முற்றுகையிட்டனர்.

தினத்தந்தி

ஆலங்குடி:

ஆலங்குடி அருகே திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வெண்ணவால்குடி ஊராட்சியில் பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்ட த்தின் கீழ் முறைகேடு நடந்துள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட ஊராட்சி செயலாளர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாவும், அவரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கீழாத்தூர் ஒன்றிய செயலாளர் குமாரவேல் தலைமையில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அனுமதியின்றி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஆலங்குடி போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்