தமிழக செய்திகள்

நாடாளுமன்ற தேர்தல்: உத்தேச வேட்பாளர் பட்டியலை அனுப்ப அண்ணாமலைக்கு பாஜக தலைமை உத்தரவு

நாடாளுமன்ற பணிகளை துவங்க அண்ணாமலைக்கு டெல்லி பாஜக தலைமை உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தினத்தந்தி

சென்னை,

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில் அதை எதிர்கொள்வதற்கான பணிகளில் அனைத்துக் கட்சிகளும் மும்முரமாக இறங்கியுள்ளன. தேர்தலை கவனிப்பதற்காக தனியாக நிர்வாகிகள் நியமிக்கப்படுகிறார்கள். கட்சியின் கூட்டணிகள் குறித்தும், வேட்பாளர்கள் குறித்தும் முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் வெற்றி வாய்ப்புள்ள 3 பேர் கொண்ட உத்தேச வேட்பாளர் பட்டியலை தயார் செய்து இந்த மாத இறுதிக்குள் அனுப்புமாறு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் நாடாளுமன்ற பணிகளை துவங்க அண்ணாமலைக்கு டெல்லி பாஜக தலைமை உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் பணிகளை பாஜக தொடங்கியுள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது