தமிழக செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி:

தினத்தந்தி புகார் பெட்டி:

அடிப்படை வசதி வேண்டும்

மதுரை மாவட்டம் நேசனேரி கிராமத்தில் சரியான சாலை வசதி, போக்குவரத்து வசதி, குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் இந்த கிராமத்தில் உள்ள மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சேவகன், நேசனேரி.

சிக்னல் தேவை

மதுரை குருவிக்காரன் சாலையில் புதிதாக அமைக்கப்பட்ட உயர்மட்ட மேம்பாலம் நான்கு முனை சந்திப்பு ரவுண்டானாவில் சிக்னல்கள் அமைக்கப்படவில்லை. இதனால் நான்கு திசைகளில் இருந்து வரும் வாகனங்கள் அதிவேகத்தில் செல்வதால் அடிக்கடி விபத்துக்கள் நடந்த வண்ணம் உள்ளன. எனவே இந்த பகுதியில் சிக்னல்கள் அமைத்து விபத்துக்களை தடுக்க வேண்டும்.

சிவா, மதுரை.

அடிப்படை வசதி வேண்டும்

மதுரை மாவட்டம் நேசனேரி கிராமத்தில் சரியான சாலை வசதி, போக்குவரத்து வசதி, குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் இந்த கிராமத்தில் உள்ள மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சேவகன், நேசனேரி.

சிக்னல் தேவை

மதுரை குருவிக்காரன் சாலையில் புதிதாக அமைக்கப்பட்ட உயர்மட்ட மேம்பாலம் நான்கு முனை சந்திப்பு ரவுண்டானாவில் சிக்னல்கள் அமைக்கப்படவில்லை. இதனால் நான்கு திசைகளில் இருந்து வரும் வாகனங்கள் அதிவேகத்தில் செல்வதால் அடிக்கடி விபத்துக்கள் நடந்த வண்ணம் உள்ளன. எனவே இந்த பகுதியில் சிக்னல்கள் அமைத்து விபத்துக்களை தடுக்க வேண்டும்.

சிவா, மதுரை.

தெருநாய்கள் தொல்லை

மதுரை மாவட்டம் திருமங்கலம், அசோக் நகர் மகமதுஷாபுரம் ஆகிய பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இந்த நாய்கள் சாலையில் செல்பவர்களை துரத்தி அச்சுறுத்துவதால் பொதுமக்கள் வெளியே செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நிபுணா மகிழினி, திருமங்கலம்.

குண்டும், குழியுமான சாலை

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் இருந்து முத்துப்பட்டி செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் பயணிப்பவர்கள் அவ்வப்போது சிறு, சிறு விபத்துக்களை சந்தித்து வருகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோபிநாத், அவனியாபுரம்.

தெருவிளக்குகள் வேண்டும்

மதுரை மாவட்டம் பரவை பேரூராட்சி வி.ஓ.சி. நகர் பேங்க் காலனியில் தெருவிளக்குகள் இல்லை. இதனால் இந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் இருட்டில் வீடுகளுக்குள் விஷப்பூச்சிகள், பாம்புகள் போன்றவை வருகிறது. எனவே இந்த பகுதியில் தெருவிளக்குகள் பொருத்த சம்பந்தப பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கவுசி, பரவை.

மதுரை மாவட்டம் திருமங்கலம், அசோக் நகர் மகமதுஷாபுரம் ஆகிய பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இந்த நாய்கள் சாலையில் செல்பவர்களை துரத்தி அச்சுறுத்துவதால் பொதுமக்கள் வெளியே செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நிபுணா மகிழினி, திருமங்கலம்.

குண்டும், குழியுமான சாலை

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் இருந்து முத்துப்பட்டி செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் பயணிப்பவர்கள் அவ்வப்போது சிறு, சிறு விபத்துக்களை சந்தித்து வருகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோபிநாத், அவனியாபுரம்.

தெருவிளக்குகள் வேண்டும்

மதுரை மாவட்டம் பரவை பேரூராட்சி வி.ஓ.சி. நகர் பேங்க் காலனியில் தெருவிளக்குகள் இல்லை. இதனால் இந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் இருட்டில் வீடுகளுக்குள் விஷப்பூச்சிகள், பாம்புகள் போன்றவை வருகிறது. எனவே இந்த பகுதியில் தெருவிளக்குகள் பொருத்த சம்பந்தப பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கவுசி, பரவை.