தமிழக செய்திகள்

கஸ்தூரி ரங்க பெருமாள் கோவிலில் பவித்ர உற்சவம்

விளக்குடி கஸ்தூரி ரங்க பெருமாள் கோவிலில் பவித்ர உற்சவம் நடந்தது.

வடுவூர்:

மன்னார்குடி அருகே உள்ள விளக்குடி கஸ்தூரி ரங்க பெருமாள் கோவிலில் பவித்ர உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி மூலவர், பெருமாளுக்கு வண்ண பட்டு நூல்களால் செய்யப்பட்ட பவித்திரமாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஸ்ரீரங்கம் பவுண்டரிகபுரம் ஆண்டவன் ஆசிரம ஜீயர், வடுவூர் வேத பாடசாலை முதல்வர், ஆசிரியர்கள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து நிகமாந்த மகா தேசிகன் சாமியின் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையிலும் ஜீயர் மற்றும் தீட்சதர்கள் கலந்து கொண்டனர்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்