தமிழக செய்திகள்

சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதலை கண்டித்து அமைதி ஊர்வலம்

சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதலை கண்டித்து அமைதி ஊர்வலம் நடந்தது.

தினத்தந்தி

கல்லக்குடி:

புள்ளம்பாடி வட்டார அளவிலான கிறிஸ்தவ அமைப்புகள் சார்பில் புள்ளம்பாடி புனித அன்னாள் ஆலயத்தில் இருந்து, மணிப்பூர் மாநிலத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல் சம்பவத்தை கண்டித்து அமைதி ஊர்வலம் நடைபெற்றது. புள்ளம்பாடி மறைவட்ட முதன்மை குரு சூசை மாணிக்கம் தலைமையில் நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் சகாயமாதா மருத்துவமனை இயக்குனர் அல்போன்ஸ், உதவி பங்கு தந்தை அந்தோணிராஜ், ஜோன்ஸ் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள், அருட்சகோதரிகள், கிறிஸ்தவ மக்கள் கையில் பதாகைகளை ஏந்தி திரளாக கலந்து கொண்டனர். இந்த ஊர்வலம் புனித அன்னாள் ஆலயத்தில் தொடங்கி கடைவீதி, பஸ் நிலையம், சகாயமாதா பஸ் நிலையம் வழியாக மீண்டும் ஆலயம் வந்தடைந்தது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்