தமிழக செய்திகள்

பயிர்களை சேதப்படுத்தும் மயில்கள்

பயிர்களை மயில்கள் சேதப்படுத்துவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தினத்தந்தி

கரூர் மாவட்டம் நொய்யல், அத்திப்பாளையம், குப்பம், கோம்புப்பாளையம், நல்லிக்கோவில், கரைப்பாளையம், திருக்காடுதுறை, புன்னம், பழமாபுரம், கொங்கு நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் நெல், சோளம், மக்காச்சோளம், கேழ்வரகு, கம்பு உள்ளிட்டவைகளை பயிரிட்டுள்ளனர். இப்பகுதியில் மயில்கள் அதிகளவில் உள்ளதால் பயிறு வகைகள் மற்றும் தானியங்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகள் கவலையடைந்து வருகிறார்கள். விவசாயத்தில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டு வரும் நிலையில் மயில்களின் தொல்லையால் மேலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட வனத்துறையினர் இப்பகுதியில் உள்ள மயில்களை பிடித்து வனப்பகுதிகளுக்கு கொண்டு சென்று விடவேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்