தமிழக செய்திகள்

மானை வேட்டையாடிய 4 பேருக்கு ரூ.1 லட்சம் அபராதம்

மானை வேட்டையாடிய 4 பேருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

தினத்தந்தி

சேவூர்

அவினாசி தாலுகா சேவூர் அருகே பொங்கலூர் பகுதியில் மான், முயல் உள்ளிட்டவற்றை வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று அப்பகுதிக்கு சென்ற வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது பொங்கலூர் பகுதியை சேர்ந்த ரஞ்சித்குமார் வீட்டில் மான் கறி சமைத்துக்கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனடியாக போலீசார் பொங்கலூரைச் சேர்ந்த ரவி (வயது 40), ரஞ்சித்குமார் (28), நாராயணன் (45), வெள்ளியங்கிரி (40) ஆகியோரை பிடித்து விசாரித்ததில், அவர்கள் மானை வேட்டையாடி சமைத்து உண்பது தெரிய வந்தது. இதையடுத்து வனத்துறையினர் அவர்கள் 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து, 4 பேருக்கும் தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சண்டிகாரில் காலிஸ்தானிய பயங்கரவாதிகள் பெயரில் 26 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஈரானை தாக்கும் அளவுக்கு அமெரிக்காவிடம் வலிமை இல்லை; அதனாலேயே... மத்திய கிழக்கு நிபுணர் பேட்டி

மராட்டியம் அர்ப்பணிப்புள்ள ஒரு தலைவரை இழந்து விட்டது: அஜித் பவார் மறைவுக்கு தெண்டுல்கர் இரங்கல்